29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

வீதியில் இயங்காமல் நின்ற வாகனத்தை தள்ளி இயங்க வைத்த யானை!

ஹபரண பிரதான வீதியில் கோளாறு காரணமாக நடுவீதியில் நின்ற ஹன்டர் வாகனமொன்றை காட்டு யானை, பின்பக்கத்திலிருந்து தள்ளி இயங்க வைத்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

அண்மையில் கந்தளாயிலிருந்து, தம்புள்ளைக்கு மரக்கறி ஏற்றச் சென்ற ஹன்டர் வாகனமொன்று, ஹபரண பகுதியில் நடு வீதியில் செயலிழந்து நின்று விட்டது. சாரதி அதனை இயக்க முயன்றார். முடியவில்லை.

அந்த பகுதியில் ஆள் நடமாட்டமும் இருக்கவில்லை. என்ன செய்வதென தெரியாமல் அவர் தவித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த காட்டு யானையொன்று, வாகனத்தின் பக்கமாக இரண்டு முறை தள்ளி, வாகனத்தை இயங்க வைத்தார். இதையடுத்து, வாகனம் நகரத் தொடங்கியது.

இதனை, அந்த வீதி வழியாக வந்த இளைஞன் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து, சமூக ஊடங்களில் பதிவேற்றியுள்ளார். அது வைரலாகியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

Leave a Comment