பிரதமர் மிஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க இருவரும் ஒன்றாக உணவருந்தும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து ஐ.தே.க விளக்கமளித்துள்ளது.
வியாழக்கிழமை இரவு நடைபெற்ற அந்த சந்திப்பு, இரகசியமான ஒரு அரசியல் விவாதமல்ல என ஐ.தே.க தெளிவுபடுத்தியுள்ளது.
“திரு. மஹிந்த ராஜபக்ஷ மற்றும் திரு. ரணில் விக்ரமசிங்க இருவரும் கொழும்பு 3 , 5வது பாதையில், திரு. விக்ரமசிங்கவின் அயல் வீட்டில் நடந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர். குறிப்பாக அவர்கள் அரசியல் பற்றி குறிப்பாக அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் ஒருபோதும் விவாதிக்கவில்லை. குறிப்பாக பிரதமரின் கீழ் வரும் நிறுவனங்களை மாற்றுவது தொடர்பில் விவாதிக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




