954 தொற்றாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது பாதுகாப்பான நிலை உருவாகி வருகின்றது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கொவிட்ட தடுப்பூசி மற்றம் தொற்ற நிலவரம் தொடர்பான ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை காலமும் 954 பேர் கொவிட்ட 19 தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். அதில் 281 பேர் சிகிச்சை பெற்ற வருகின்றார்கள். ஏனையுார் ஏற்கனவே சிகிச்சை பெற்று வீடுகளிற்கு திரும்பியவர்களாக காணப்படுகின்றார்கள்.
அதேபோன்று அண்மைக்காலமாக அதிகளவான தொற்றாளர்கள் மாவட்டத்தில் இனம்காணப்படவில்லை. ஆகவே எமது மாவட்டம் பாதுகாப்பான சூழலிலேயே காணப்படுகின்றது என கூறலாம் எனவும் அவர் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.




