இலங்கை கொள்வனவு செய்த ஃபைசர் தடுப்பூசியின் ஒரு தொகுதி- 26,000- இன்று காலை இலங்கையை வந்தடைந்தது.
இதுவரை சீன தடுப்பூசிகளே அதிகளவில் செலுத்தப்பட்டு வந்த நிலையில், ஃபைசர் தடுப்பூசி பெற்ற தெற்காசியாவில் முதல் நாடாக இலங்கை திகழ்கிறது என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன ஆகியோர் தங்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்.
ஏனெனில், கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் மார்ச் 25 அன்று மாலைதீவுகள் ஃபைசர் தடுப்பூசியை பெற்று விட்டன. யுனிசெஃப் மூலம் 5850 ஃபைசர் தடுப்பூசிகள் கிடைத்தன.




