லண்டன் அரண்மனையில் இளவரசி டயானாவுக்கு சிலையை திறந்து வைத்த இளவரசர்கள்

Date:

ரிட்டிஷ் இளவரசி டயானாவின் 60-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, லண்டன் அரண்மனை தோட்டத்தில் அவருக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் அனைத்து தரப்பினராலும் விரும்பப்பட்டவர் பிரிட்டிஷ் இளவரசி டயானா. இளவரசர் சார்லசை காதலித்து திருமணம் செய்த அவர், ராஜ குடும்பத்தின் உறுப்பினராக ஆனபோதும், தனது நிலையில் இருந்து மாறாமல் இருந்தார். அரச குடும்பத்தினர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற மரபுகளை புறந்தள்ளிய டயானா, தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர்.

டயானா கார் விபத்தில் இறந்து 23 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவரது மகன்களான இளவரசர்கள் வில்லியம், ஹாரி இருவரும் தாயாரின் மீதான பாசத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில், இளவரசி டயானாவின் 60-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, லண்டன் அரண்மனை தோட்டத்தில் அவருக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது. இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோர் சிலையை திறந்து வைத்தனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெற்றி பெறும் தவெக வேட்பாளர்களை மாமல்லபுரம் ‘ரிசார்ட்’டில் பாதுகாக்க திட்டம்: நிர்வாகிகள் ரகசிய ஏற்பாடு

இன்று வெளி​யாகும் தேர்​தல் முடிவு​களுக்​குப் பிறகு தனது கட்சி எம்​எல்​ஏ-க்​களை பாது​காக்க...

மணலுடன் சென்ற பூநகரி பிரதேசசபை உழவு இயந்திரத்தை பறிமுதல் செய்த பொலிசார்

பூநகரி பிரதேச சபைக்குரிய உழவு இயந்திரம் ஒன்று அனுமதியற்ற மணலுடன் விசேடஅதிரடிப்படையினரால்...

அமெரிக்காவுடனான பேச்சுக்கு பல நிபந்தனைகளை கைவிட்டது ஈரான்!

ஈரான் தனது முந்தைய சில நிபந்தனைகளைக் கைவிட்டு, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்