குட்டி யானைகளை தாக்கும் ஹெர்ப்ஸ் வைரஸ்..

Date:

கேரள மாநிலத்தின் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக்கடை காட்டுப்பகுதியில் கேரள வனத்துறைக்கு சொந்தமான யானை முகாம் உள்ளது. இந்த முகாமில் ஏராளமான யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் இந்த யானை முகாமில் இருந்த ஸ்ரீகுட்டி என்ற 3 வயது குட்டியானைக்கு கடந்த வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதற்கு கால்நடை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் டாக்டர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி அந்த யானை பரிதாபமாக மரணம் அடைந்தது.

இதுதொடர்பாக கேரள வனத்துறை சார்பில் கால்நடை மருத்து அதிகாரி ஈஸ்வரன் தலைமையில் டாக்டர் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.கால்நடை மருத்துவ குழுவினரின் விசாரணையில், காட்டாக்கடை முகாமில் இருந்த ஸ்ரீகுட்டி யானை ஹெர்ப்ஸ் என்ற வைரஸ் தாக்கி பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து கால்நடை மருத்துவ அதிகாரி ஈஸ்வரன் கூறியதாவது:-

யானைகளை தாக்கும் ஹெர்ப்ஸ் என்ற வைரசால் பாதிக்கப்பட்டு ஸ்ரீகுட்டி யானை பலியாகியுள்ளது. இந்த வைரஸ் யானைகளை மட்டுமே தாக்கக்கூடியது ஆகும்.

இதனால் காட்டாக்கடை முகாமில் உள்ள அனைத்து யானைகளுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் வேறு யானைகளுக்கு பாதிப்பு இல்லை. தற்போது இந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதனால் தற்போது கேரளாவின் காட்டுப்பகுதியில் இருந்து யானை முகாம்களுக்கு கொண்டுவரப்படும் யானைகளுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகளை நடத்திய பின்னரே மற்ற யானைகளுடன் முகாமில் விட வேண்டும். பரிசோதனை செய்யும் வரை முகாமில் தனிமைப்படுத்தி பராமரிக்க வேண்டும் என்று யானை முகாம் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்...

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்