இந்தியா செய்த உதவியை மறக்காத அமெரிக்கா; கூடுதலாக 40 மில்லியன் டாலர் உதவி !

Date:

இந்தியாவுக்கு கூடுதலாக 40 மில்லியன் டாலர் உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

கொரோனா நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. குறிப்பாக இரண்டாம் அலையால் இந்தியா திக்குமுக்காடி போனது. கொரோனாவை சமாளிக்க இந்தியாவுக்கு உதவி வழங்கப்படும் என ஏற்கெனவே அமெரிக்கா அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்தியாவுக்கு 41 மில்லியன் டாலர் கூடுதல் உதவி வழங்கப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. கொரோனா நெருக்கடி காலத்தில் இந்தியாவின் எதிர்கால சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த உதவியை அமெரிக்கா வழங்குகிறது.

இதன் மூலம் இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கவுள்ள மொத்த உதவி 200 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க சர்வதேச வளர்ச்சி முகமை, “அமெரிக்காவுக்கு தேவைப்பட்டபோது இந்தியா முன்வந்து உதவி வழங்கியது.

இப்போது கொரோனாவுடன் போராடி வரும் இந்திய மக்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது” என்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உதவி மூலம் கொரோனா பரிசோதனை, கொரோனா சார்ந்த மனநல சிகிச்சை சேவைகள், தொலைதூர பகுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்தலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்!

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை...

நாளை சில பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில்

முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்