ராமர் போல் வில்லை ஒடித்து மனைவியை கரம் பிடித்த இளைஞர்!

Date:

ராமாயணத்தில் ராமர் வில்லை ஒடித்து சீதையை திருமணம் செய்ததை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். ஆனால் இன்றைய நடை முறையில் அப்படியாக வில்லை ஒடித்து திருமணம் செய்யும் நடைமுறை எந்த வழக்கத்திலும் இல்லை. இந்நிலையில் சமீபத்தில் பீகாரில் நடந்த ஒரு திருமணம் ராமருக்கு நடந்த திருமணம் போன்றே நடந்துள்ளது.

பீகார் மாநிலம் சரண் மாவட்டம் சபல்பூர் பகுதியில் உள்ள சோன்பூர் பிளாக் பகுதியில் சமீபத்தில் ஒரு திருமணம் நடந்தது ராமாணயத்தில் எப்படி ராமருக்கும் சீதைக்கு திருமணம் நடக்குமோ அப்படியே நடந்தது. அமைக்கப்பட்டிருந்த மேடையில் முதலில் மணமகன் ஒரு வில்லை தன் இரு கைகளால் ஓடிக்கிறார். பின்னர் மேடைக்கு கீழே இருந்து வந்த மணமகள், மணமகனிற்கு மாலை அணிவித்து தன் கணவனாக ஏற்றுக்கொள்கிறார். மக்கள் எல்லோரும் அந்த புதுமண தம்பதியை பூக்கள் தூவி வாழ்த்தினர்.

பீகாரில் நடந்த இந்த திருமணம் அப்பகுதியில் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது உண்மையான ராமாயணம் போல நடந்த இந்த திருமணத்தை அப்பகுதியில் உள்ள மக்கள் அதிகமாக பேசி வருகின்றனர். இந்த திருமணம் கொரோனா காலத்தில் நடந்திருந்தாலும், எந்த விதமான கொரோனா முன்னெச்சரிக்கையோ அல்லது பாதுகாப்பு நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. மேடையில் இருப்பவர்கள் மாஸ்க் அணியவில்லை, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வில்லை. என குற்றச்சாட்டும் இந்நிகழ்வின் மீது எழுந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்