உலகம்

டெல்டா வகை கொரோனா பரவல்: இங்கிலாந்து விமானங்களுக்கு ஹாங்காங் தடை..

டெல்டா வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது.

இங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், கடந்த சில நாட்களாகவே அந்நாட்டில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது.

வரும் ஜுலை 1ம் திகதி முதல் இந்த தடை அமலுக்கு வரும் என்று ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது. டெல்டா வகையில் இருந்து உருமாற்றம் அடைந்த L452R வைரஸ் பாதிப்பு, இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகள் மூலமாக ஹாங்காங்கிலும் பரவியுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் வர ஹாங்காங் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டவர் மரணம்!

Pagetamil

‘என் அனுமதி இல்லாமல் என்னை பெற்றெடுத்திருக்கிறார்கள்’: பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்த பெண்!

Pagetamil

லத்வியாவுக்குள் ஆட்கடத்தலில் ஈடுபட்ட 5 இலங்கையர்கள் கைது!

Pagetamil

அமெரிக்காவில் வீதியில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்!

Pagetamil

‘இஸ்ரேலின் தற்காப்பை உறுதி செய்யும் ஆயுதங்களை வழங்குகிறோம்’: அமெரிக்கா

Pagetamil

Leave a Comment