29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
உலகம்

டெல்டா வகை கொரோனா பரவல்: இங்கிலாந்து விமானங்களுக்கு ஹாங்காங் தடை..

டெல்டா வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது.

இங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், கடந்த சில நாட்களாகவே அந்நாட்டில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது.

வரும் ஜுலை 1ம் திகதி முதல் இந்த தடை அமலுக்கு வரும் என்று ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது. டெல்டா வகையில் இருந்து உருமாற்றம் அடைந்த L452R வைரஸ் பாதிப்பு, இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகள் மூலமாக ஹாங்காங்கிலும் பரவியுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் வர ஹாங்காங் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

சரணடைந்தார் ஜெலன்ஸ்கி!

Pagetamil

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

Leave a Comment