புதிய சமூக தளத்திற்குள் கால் பதித்த டொனால்ட் ட்ரம்ப்!

Date:

ரம்பிள் சமூக தளம் மூலம் தனது பேரணியை ஸ்ட்ரீம் செய்யும் முயற்சியில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஈடுபட்டுள்ளார்

ரம்பிள் சமூக தளம் மூலம் தனது பேரணியை ஸ்ட்ரீம் செய்யும் முயற்சியில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஈடுபட்டுள்ளார்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் தனிப்பட்ட அதிகாரப்பூர்வ சமூக வலைதளக் கணக்குகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முடக்கியுள்ளன. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் இருந்த காலத்தில், கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துத் தெரிவித்ததாகக் கூறி, அவரது தனிப்பட்ட சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி நடத்த முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். புளோரிடா, ஓஹியோ உள்ளிட்ட மாகாணங்களில் தனது ஆதரவாளர்களுடன் ஜோ பைடன் அரசுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி நடத்த அவர் திட்டமிட்டு வருகிறார்.

ஓஹியோ பேரணியை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய, தற்காலிகமாக, ரம்பிள் என்ற சமூக தளத்தில் டொனால்டு ட்ரம்ப் இணைந்துள்ளார். இதை ரம்பிள் தளத்தின் நிர்வாக இயக்குனர் கிரிஸ் பாவ்லோவ்ஸ்கி உறுதிப்படுத்தி உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்!

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை...

நாளை சில பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில்

முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்