25.8 C
Jaffna
March 2, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

இலங்கையில் நடப்பது இலங்கை அரசின் ஆட்சியா?; வத்திக்கானின் ஆட்சியா?: சிவசேனை!

இலங்கையில் நடப்பது இலங்கை அரசின் ஆட்சியா வத்திக்கானின் ஆட்சியா என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் கேள்வி எழுப்பினார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்

இலங்கை கத்தோலிக்க முதல்நிலை குருவானவர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்கள் அண்மையிலே ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார் .இலங்கையில் ஒழுங்கான அரசாங்கம் நடைபெறவில்லை என்றும் இலங்கை அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளது என்றும் தெரிவித்தார். இது ஒரு கொடுமையான கூற்று.

கத்தோலிக்க மக்களுக்கு நடந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் கொடுமை தான். அதற்காக அரசு செயல்படவில்லை என கேள்வி கேட்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அவருக்கு அந்த கேள்வியை கேட்பதற்கு அருகதை கிடையாது. இதுதான் முதல் தரம் வழிபாட்டிடம் உடைக்கப்பட்டதா? அல்ல நானூற்று இருபது ஆண்டுகளுக்கு முன்பு திருக்கோணேச்சரம்,
திருக்கேதீச்சரம் ஆலயங்களை உடைத்தபோது நாம் மனித உரிமை அமைப்புக்கு போனோமா?

மன்னார் ஆயர் என்ன செய்கின்றார். திருக்கேதீஸ்வர வளைவு உடைக்கப்பட்டமைக்கு இதுவரை மன்னிப்பு கேட்டாரா. அரசை குறை சொல்வதற்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித்க்கு என்ன தகுதியுள்ளது. போப்பாண்டவரின் ஆணையை நிறைவேற்றும் கர்தினாலுக்கு இலங்கை அரசை விமர்சிப்பதற்கு தகுதி இல்லை என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

சங்கு கூட்டணியில் இணையாமலிருக்க தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசன் தரப்பு தீர்மானம்: பணம் வழங்குபவர்களின் அழுத்தத்தால் முடிவு?

Pagetamil

‘வடக்கு கிழக்கு மக்களின் ஆணையுடன் உருவான அரசாங்கம் இது’: ஐ.நாவில் சொன்னது அரசாங்கம்!

Pagetamil

உக்ரைன் போரில் ஐரோப்பிய நாடுகளின் ஈடுபாட்டால் 3ஆம் உலகப்போர் வெடிக்கலாம்: டிரம்ப் எச்சரிக்கை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!