நேற்று 1,825 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 251,751 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தொற்றாளர்களில் 1,801 பேர் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 24 நபர்களின் முடிவுகளும், COVID-19 க்கு நேர்மறையாக அமைந்தன.
தற்போது, 32,049 பேர் நாடு முழுவதும் பல மையங்களில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று, COVID-19 இலிருந்து மீண்ட 2,172 நபர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 216,840 ஆக உயர்ந்தது.
தொற்று சந்தேகத்தில் 1,398 பேர், தற்போது மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.
இதற்கிடையில், நேற்று மேலும் 43 COVID-19 தொடர்பான இறப்புகளும்பதிவாகின. இறப்பு எண்ணிக்கை 2,905 ஆக உயர்ந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1