இரணைத்தீவு மக்களுக்கு மலேரியா பரிசோதனை!

Date:

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு மக்களுக்கு
நேற்றைய (25) தினம் மலேரியா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை மலேரியா அற்ற நாடாக அறிவிக்கப்பட்டிருப்பினும் இரணைத்தீவு
இலங்கை இந்தியாவுக்கு இடைப்பட்ட கடலில் தனித்தீவாக இருப்பதனால்
இந்தியாவில் தற்போதும் இருக்கின்ற மலோியா சில வேளைகளில்
கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் இப் பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு அங்கு குடியேறி வசித்து வருகின்ற
மக்களுக்கு நுளம்பு வலைகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மலோியா தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியும், மாட்ட
உளசல மருத்துவ அதிகாரியுமான மா. ஜெயராஜா தலைமையிலான மருத்துவக் குழுவினர்
இரணைத்தீவுக்குச் சென்று அங்கு வசிக்கின்றவர்கின் இரத்த மாதிரிகளை
பரிசோதனைக்காக பெற்றுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்