பசிலுக்காக பதவி துறப்பதை மறுத்த தேசியப்பட்டில் எம்.பி!

Date:

பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு வழியேற்படுத்த, பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தனது பதவியை துறக்கவுள்ளதாக வெளியான செய்திகளை  அவர் மறுத்துள்ளார்.

இந்த விஷயத்தில் ஒரு முன்மொழிவு முன்வைக்கப்படவில்லை, இது தொடர்பாக விவாதங்களும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலிருந்து நேற்று நாடு திரும்பிய பசில் ராஜபக்ஷ, ஜூலை 6 ஆம் திகதி தேசிய பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்ய தயாராகி வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பின்னர் பசில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்பார் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஊழல் பெருச்சாளிகளின் மேடையில் புலிகளின் பரப்புரை: சிஐடியில் முறைப்பாடு!

அனுராதபுரத்தில் நடைபெற்ற 'ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன' (SLPP) பேரணியில், தமிழீழ விடுதலைப்...

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்