அமெரிக்க அதிபர் பைடனை சந்திக்கிறார் ஆப்கானிஸ்தான்  அதிபர் அஷ்ரப்!

Date:

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் – ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி ஆகியோர் வரும் 25-ம் திகதி சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பில், ‘ஆப்கான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறாது என்பதை உறுதி செய்யும் வழிகள் குறித்து விவாதிக்கப்படும்’ என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து செப்டம்பர் 11-ம் திகதிக்குள் அமெரிக்க படைகள் மற்றும் நேட்டோ படைகளை திரும்பப் பெற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ள நிலையில், னரும் 25-ம் திகதி வெள்ளிக்கிழமை முதன் முறையாக, அஷ்ரப் கனியை,  பைடன் நேரடியாக சந்தித்து பேசுகிறார்.

துருப்புகளை விலக்கிக் கொள்ளும் அதே சமயம் மனிதாபிமான உதவிகளைத் தொடர்ந்து செயல்படுத்த எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது பற்றி இருவரும் விவாதிக்க உள்ளனர். மேலும், பயங்கரவாத குழுக்களுக்கு, ஆப்கன் மீண்டும் பாதுகாப்பான புகலிடமாகாது என்பதை உறுதிப்படுத்த எவ்வாறு இணைந்து செயல்படுவது என்பது பற்றியும் பேச இருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

பைடன் – கனி இடையேயான உயர்மட்ட சந்திப்பு நடக்க உள்ள நிலையில், மே 1ம் தேதி முதல் ஆப்கானிஸ்தானில் புதிய மாவட்டங்களை தலிபான்கள் கைப்பற்றி வருகின்றனர். திங்களன்று வடக்கு குந்தூஸ் மாகாணத்தில் ஒரு முக்கிய மாவட்டத்தினை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக செய்தி வெளியானது.

அங்கிருந்து 50 கி.மீ., தொலைவில் உள்ள ஆப்கானிஸ்தான்   – தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியான ஷேர் கான் பந்தரை இன்று கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிய பாதுகாப்புப் படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையிலான சண்டை அதிகரிப்பது, அமெரிக்கா தலைமையிலான சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கறிவேப்பிலை பறித்தவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே...

கிளிநொச்சியில் திடீர் வாகனப் பரிசோதனை

கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரின் உதவியுடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும்...

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்