28.5 C
Jaffna
March 20, 2023
இலங்கை

கொலைகார பயங்கரவாதத்தை ஆதரிப்பதை விட நாட்டை காக்கும் அரசின் காலடியை நக்குபவனாக இருக்கிறேன்: சுரேன் ராகவனிற்கு இதிலும் பெருமை வேறு!

கொலைகார பயங்கரவாதத்தை ஆதரிக்கும் கூலிப்படையாக இருப்பதை விட, இந்த நாட்டை காப்பாற்றும் அரசாங்கத்தின் காலணியை நக்கும் நாயாக இருப்பதில் பெருமையடைகிறேன் என குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன்.

பாராளுமன்றத்தில் இன்று (23) சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்த சமயத்தில் இதனை தெரிவித்தார்.

பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்ற ஆரம்பித்த சமயத்தில், 30 செக்கன்களில்ஒரு விடயத்தை குறிப்பிடப் போவதாக தெரிவித்து, தன்னை நன்றாக கற்றவர் என கூறிக்கொண்டிருக்கும் தமிழ் எம்.பி ஒருவர் (எம்.ஏ.சுமந்திரன்) இந்த சபையில் இன்று 3 முறை என்னை நாய் என கூறினார்“என கூறிய போது, சபாநாயகர் அவரை இடைமறித்து, இது தொடர்பில் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசுமாறு கூறினார்.

இதன்போது, சுரேன் ராகவன்- “ஆம், நான் அரசாங்கத்தின் காலணியை நக்கும் நாய்தான். பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் கொலைகார பயங்கரவாதத்தை ஆதரிக்கும் கூலிப்படையினராக இருப்பதை விட எனது அரசைப் பாதுகாக்க ஒரு நாயாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்” என்றார்.

ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒலியெழுப்பி பாராட்டு தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாணவி வித்தியா கொலையாளிகளின் மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்தது உயர்நீதிமன்றம்!

Pagetamil

ஹரக் கட்டாவின் ரிட் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சட்டமா அதிபர்

Pagetamil

வாரிசு அரசியல் காலம் முடிந்து விட்டது; நாமல் வேறு வேலை தேட வேண்டும்: விமல் வீரவன்ச!

Pagetamil

தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை நீடிப்பு!

Pagetamil

வடக்கு கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை, குத்தகைக்கு வழங்குவதை கண்டித்து மன்னாரில் எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!