கம்பைநல்லூர் அருகே வயல்வெளியில் பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகளை பொதுமக்கள் ஆர்வமாக பார்த்து ரசித்தனர்.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே கால்சானூர் கிராமத்தில், பெரமன் என்பவருக்கு சொந்தமான வயல்வெளியில் , 6 அடி உயரம் உள்ள இரண்டு பாம்புகள் பின்னி பிணநை;து நடனமாடியது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்து ரசித்தனர். மேலும் அங்குள்ள இளைஞர்கள் அருகே சென்று மொபைல் போனில் வீடியோ எடுத்தும் செல்பி எடுத்தனர். பொதுமக்கள் அருகே சென்று பார்ப்பதை கண்டுகொள்ளாமல் பாம்புகள் தொடர்ந்து 30 நிமிடத்திற்கு மேல் பின்னி நடனமாடி வந்தது. பின்னர் பொதுமக்கள் அங்கு அதிகம் கூடியதால், பாம்புகள் பிரிந்து அருகே இருந்த புதருக்குள் சென்றது.
https://youtu.be/mVyOJjmhBWg



