மவுண்ட் லவனியா பகுதியில் கிரெடிட் கார்டு மோசடி குற்றச்சாட்டில் சீன பிரஜை உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி கிரெடிட் கார்ட்களைப் பயன்படுத்தி ஒன்லைனில் பொருட்களை வாங்கிய குற்றச்சாட்டில், டெம்பிள்ஸ் வீதியில் குஇவர்கள் கைது செய்யப்பட்டனர்.
போலி கிரெடிட் கார்ட்கள் மூலம் ரூ .787,000 மதிப்புள்ள பொருட்களை இவர்கள் கொள்வனவு செய்துள்ளனர்.
பொருட்களை விற்ற ஒரு நிறுவனம் அளித்த முறைப்பாட்டையடுத்து நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 30 போலி கிரெடிட் கார்ட்கள் மீீட்கப்பட்டன.
கைதானவர்கள் அவை இன்று மவுண்ட் லவ்னியா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்.



