இந்தியாவிற்கு விமான சேவையை மீண்டும் துவக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு!

Date:

வரும் 23-ஆம் திகதி முதல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளுக்கு மீண்டும் விமான சேவை இயக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்து உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தங்கள் நாட்டிற்கு வருபவர்கள் 6 விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அமீரக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி ஏதாவது ஒரு தடுப்பூசியின் 2 டோஸ் செலுத்திக் கொண்டதற்கான சான்று கொண்டு வர வேண்டும் என தெரிவித்து உள்ளது.

மேலும் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். சான்று வேண்டும் என்றும், விமானம் ஏறுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பும் துபாயில் தரையிறங்கியதும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது., பரிசோதனை முடிவுகள் வரும் வரை பயணிகள் தனிமைப்படுத்துதலை முறையாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...

TGTE’s Tamil Olympics – News

தமிழ் ஒலிம்பிக் 2027 திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! நாடுகடந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்