29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இந்தியா

காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞன்!

கடப்பா அருகே காதலிக்க மறுத்த பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்த இளைஞனை கிராம மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து பொலீசில் ஒப்படைத்தனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பட்வேலு மண்டலம் சென்னூர்ராஜு பள்ளி கிராமத்தை சேர்ந்தவன் சரண். இவன் அருகே உள்ள சிந்தலசெரு கிராமத்தை சேர்ந்த சிரிஷா என்ற பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தான்.

இந்நிலையில் சிரிஷா காதலை ஏற்க மறுத்ததால் கோபமடைந்த சரண். சிரிஷாவின் சொந்த ஊருக்குச் சென்று சிரிஷாவிடம் தான் கடைசியாக உன்னிடம் பேச வேண்டும் என தனியாக அழைத்துள்ளார்.

சிரிஷா வந்தவுடன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் பலமாக கத்தியால் அறுத்துள்ளான். இதனால் அலறி துடித்த நிலையில் அங்கு வந்த கிராம மக்கள் சரணை பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

இந்நிலையில் கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்த சிரிஷாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர் கூறிய நிலையில் அந்த இளைஞனை கிராம மக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

வழக்கு பதிவு செய்த பொலீசார் காயங்களுடன் இருந்த சரணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment