26.4 C
Jaffna
March 29, 2024
உலகம்

நேபாளம், பூட்டானில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம்!

திபெத்தில் பருவமழைக்காரணமாக கடந்த இரண்டு மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நேபாளம்- திபெத் எல்லையில் உள்ள சிந்துபால்சவுக் மாவட்டத்தில் மேலம்சி, இந்திராவதி ஆகிய இரண்டு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளத்தால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த வெள்ளத்ததில் கரையோர மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர். இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஏராளமானோரை காணவில்லை.

மீட்புப்படையினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றன. ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மேலம்சி பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மூன்று நாட்களாக பெய்த மழையால் வீடுகள், பாலங்கள், சாலைகள் போன்றவை அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

அதேபோல் பூடானில் லயா என்ற பகுதியும் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்திற்கான கார்டிசெப்ஸ் என்ற பூஞ்சைகளை சேகரிக்க சென்ற மக்கள், இரவில் தூங்கும்போது வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இதனால் பலி அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. அவர்கள் மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment