நாட்டில் நேற்று 2,334 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்மூலம், அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 228,256 ஆக உயர்ந்தது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 2,275 பேர், புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். சமீபத்திய வெளிநாட்டிலிருந்து வந்த 59 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 2,014 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வெளியேறினர்.
தற்போது, 33,518 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 1,548 நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.



