இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 1,356 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் நடைமுறையின் கீழ் 2020 மார்ச் 10 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையில், ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிக எண்ணிக்கையிலான கைதுகள் இதுவாகும்.
அவர்களில் அதிகமானவர்கள் மாத்தளை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அங்கு, 146 பேர் கைது செய்யப்பட்டனர், 134 பேர் கண்டியில் கைது செய்யப்பட்டனர், 116 பேர் குளியாபிட்டியில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் 32,949 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு மாகாணத்தின் 14 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் 2,795 வாகனங்களில் பயணித்த 5,333 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர். மாகாண எல்லைகளை கடந்து பயணிக்க முயன்றமை, பயண கட்டுப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டில் 56 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்.




