ஒரேநாளில் அதிகமானவர்கள் கைது!

Date:

இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 1,356 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் நடைமுறையின் கீழ் 2020 மார்ச் 10 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையில், ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிக எண்ணிக்கையிலான கைதுகள் இதுவாகும்.

அவர்களில் அதிகமானவர்கள் மாத்தளை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அங்கு, 146 பேர் கைது செய்யப்பட்டனர், 134 பேர் கண்டியில் கைது செய்யப்பட்டனர், 116 பேர் குளியாபிட்டியில் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் 32,949 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு மாகாணத்தின் 14 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் 2,795 வாகனங்களில் பயணித்த 5,333 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர். மாகாண எல்லைகளை கடந்து பயணிக்க முயன்றமை, பயண கட்டுப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டில் 56 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.ஏ. அஸ்தர் கடமையேற்பு

சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றிய அதிபர் சேவையைச் சேர்ந்த...

துமிந்த சில்வா மீதான குற்றப்பத்திரம் கையளிப்பு

ஹவ்லொக் சிட்டி எலிபேங்க் அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட T-56...

துன்னாலையில் இளைஞன் வெட்டிக்கொலை!

பருத்தித்துறை - துன்னாலையில் நேற்று (09) இரவு ஒருவர் வெட்டிக் கொலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்