யாழ்ப்பாணத்தில் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருந்த போது, கடமை முடிந்து வீடு திரும்பிய அரச உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் வழிப்பறி திருடர்களால் திருடப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவம் நேற்று (11) மாலை இடம்பெற்றது.
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இராச வீதி, கரந்தன் சந்தி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
கடமை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் தனித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அரச உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளே திருடப்பட்டது.
ஆள்நடமாட்டமற்ற அந்த பகுதியில் அரச உத்தியோகத்தரை வழிமறித்து திருடர்கள் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர். கொள்ளையர்களின் திடீர் தாக்குதலை எதிர்பாராத அரச உத்தியோகத்தர் தனது மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பியோடினார்.
திருடர்கள் அவரது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளனர்.




