எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப பாடசாலை வாகன கட்டணங்களையும் அதிகரிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் லலித் சந்திரசிரி தெரிவித்துள்ளார்.
பெற்றோருக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் கட்டணம் திருத்தப்படும் என்றார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாடு முழுவதும் பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதால் உடனடியாக அதிகரிப்பு அறிமுகப்படுத்தப்படாது என்று அவர் கூறினார்.
இருப்பினும், பாடசாலைதொடங்கும் போது நியாயமான கட்டண திருத்தம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.



