29.3 C
Jaffna
March 29, 2024
உலகம்

சைபீரிய உறைபனியில் 24000 ஆண்டுகளாக உறைந்துகிடந்த சிறிய புழு மீண்டும் உயிர்ப்பித்துள்ளது!

ஒரு நுண்ணுயிரி 24,000 ஆண்டுகளாக வடகிழக்கு சைபீரியாவின் பரந்த நிலங்களில் உறைந்து கிடந்தபின் மீண்டும் உயிர்ப்பித்து இனப்பெருக்கம் செய்துள்ளது.பிடெல்லோய்ட் ரோடிபர் எனும் இந்த நுண்ணுயிரி ரஷ்ய விஞ்ஞானிகளால் யாக்கூடியவில் உள்ள அலசெயா நதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நுண்ணுயிரி கடுமையான குளிரைத் தாங்கக்கூடியது என்று அறியப்டுகிறது. முந்தைய ஆராய்ச்சிகளில் -20 டிகிரி செல்சியஸ் குளிரிலும் அதனால் ஒரு தசாப்தத்திற்கு உயிர் வாழ முடியும் என்று கூறப்பட்டிருக்கிறது.

தரையில் இருந்து 3.5 மீட்டருக்கு கீழே எடுக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து இந்த உயிரினம் மீட்கப்பட்டுள்ளது. இது 23,960 முதல் 24,485 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம், உறைந்த நிலையில் நீண்டகாலம் உயிர்வாழும் உயிரினம் இது என்று ‘கர்ரன்ட் பையாலஜி’ எனும் இதழில் கூறப்பட்டுள்ளது.

உறைந்துபோன நிலப்பரப்புகள் பல திடுக்கிடும் அறிவியல் கண்டுபிடிப்புகளை வழங்கி இருக்கிறது.இதற்கு முன்னர் வடக்கு சைபெரியாவில் இரண்டு இடங்களில் நெமடோட்க்கள் எனப்படும் நுண்ணிய புழுக்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.அவை 30,000 ஆண்டுகள் மேல் பழமையானவை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment