சனியால் நன்மை உண்டாகுமா? : உங்கள் ஜாதகத்திற்கு சனி தரும் பலன் இதோ!

Date:

நவகிரகங்களில் முக்கிய கிரகமாகவும், ஒவ்வொரு ராசியிலும் நீண்ட காலம் சஞ்சரிக்கக்கூடிய கிரகம் சனி கிரகம். கர்ம காரகன் என அழைக்கப்படும் சனி, நீதி தேவனாக செயல்படுகிறார்.

சனி பகவானின் அமைப்பு சிலருக்கு சில கெடுதல்களைத் தந்தாலும், சில நேரங்களில் வியக்க வைக்கும் நற்பலனை அள்ளி வழங்குவார். இவரின் அருளால் ஒருவனுக்கு செல்வம், செல்வாக்கும், பொருளாதார உயர்வு அளிக்கிறார்.

கோட்சார சனி பலன்

சனி பகவான் கோட்சாரத்தில் தன்னுடைய ராசிக்கு (ஜென்ம ராசி) 12, 1, 2 ஆகிய இடங்களில் சனி சஞ்சாரம் செய்யக்கூடிய காலம் ஏழரை சனி காலமாகும்.

கோட்சாரத்தில் சனி அஷ்டா ஸ்தானம் எனும் 8ம் இடத்தில் சஞ்சரிக்கும் போது அஷ்டம சனி என்று அழைக்கப்படுகிறது. அதே போல 4ம் இடத்தில் சனி சஞ்சரித்தால் அதற்கு அர்த்தாஷ்டம சனி என்று, 7ம் இடத்தில் சனி சஞ்சரிப்பின் அதற்கு கண்ட சனி என கூறுவர்.

கோட்சார ரீதியாக சனி அமைந்திருக்கக்கூடிய இடத்தைப் பொறுத்துக் கெடு பலன் மட்டும் தான் தருவார் என்பது இல்லை. சனி ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருப்பின், கோட்சார ரீதியாக கெடுபலன் தரும் ஸ்தானத்தில் இருப்பினும் அது அதிக கெடுதிகளைத் தர மாட்டார்.

ஜாதகத்தில் சனி தரும் பலன்

உங்கள் ஜாதகத்தில் 2ம் இடத்தில் சனி இருந்தால் அவரின் குடும்பத்தில் பிரிவு, வீண் கருத்து வேறுபாடு, வாக்குவாதம், பொருளாதார நெருக்கடியும், ஏற்றத்தாழ்வு, தேவையற்ற விவாதங்களில் ஈடுபடுதல், தந்தை சொத்து நாசம் ஏற்படலாம்.

ஜாதகத்தில் 3ம் இடத்தில் சனி இருப்பின், அவருக்கு இளைய சகோதரர் தோஷம் ஏற்படும் என்றாலும், ஜாதகர் எடுக்கின்ற எந்த ஒரு முயற்சியில் சிறப்பான வெற்றி, தைரியமாக செயல்படுதல், துணிந்து செயல்படுதல், நல்ல பண வரவு ஏற்படும்.

ஜாதகத்தில் 4ம் இடத்தில் சனி சஞ்சரிப்பின் அவரின் கல்வியில் இடையூறு ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல் தாய்க்கு தோஷம், அசையா சொத்து சம்பாதிப்பதில் அல்லது பெறுவதில் இடையூறுகள் ஏற்படலாம். அவரின் சுக வாழ்வு பாதிப்பு ஏற்படலாம்.

சனி 5, 6, 7ம் இடத்தில் இருந்தால் தரும் பலன்

ராசிக்கு 5ம் இடத்தில் சனி இருப்பின் அவருக்கு புத்திர தோஷம், பூர்வீக தோஷம் ஏற்படலாம். தத்து புத்திர யோகம், உறவினர்களிடம் வீண் கருத்து வேறுபாடு உண்டாகும்.

ஜாதகத்தில் ராசிக்கு 6ம் இடத்தில் சனி அமர்ந்திருப்பின், அந்த ஜாதகரின் வாழ்க்கை முழுவதும் வலிமையும், பலமும் நிறைந்தவராக, எதிரிகள் பந்தாடப்படுவர். எதிர்பாராத பண வரவு கிடைப்பதோடு, தைரியமும், துணிவுடன் தன் வாழ்க்கையை நடத்துவார்.

ராசிக்கு 7ம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்தால் அவரின் திருமணத்தில் தாமதம் ஏற்படும், வயதான தோற்ற வரன் கிடைக்கலாம். அதுமட்டுமல்லாமல் குடும்ப உறவில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள், சண்டைகள், கூட்டாளிகளால் நஷ்டம் ஏற்படலாம்.

சனி 8, 9, 10ம் இடத்தில் இருந்தால் என்ன பலன்

ராசிக்கு 8ம் இடத்தில் சனி இருப்பின் அவருக்கு நீண்ட ஆயுள் இருக்கும் என்றாலும் பொருளாதர ரீதியான பிரச்னை, ஏழை குடும்பத்தில் திருமணம், எதிரிகளால் பிரச்னையும், கண்டமும், கண்களில் பாதிப்பு ஏற்படும்.

ராசிக்கு 9ம் இடத்தில் சனி இருந்தால் அவருக்கு பொது விஷயங்களில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். தந்தை மற்றும் பூர்விகத்தின் மூலம் அனுகூலமான பலன் பெறும் அமைப்பும், பூர்வீக சொத்து இழப்பு ஏற்படும்.

ராசிக்கு 10ம் இடத்தில் சனி இருப்பின் எந்த ஒரு விஷயத்திலும் எதிர் நீச்சல் போட்டு தான் முன்னேறக்கூடிய அமைப்பு இருக்கும். அடிமைத் தொழில் செய்யும் நிலை, பொதுப் பணியில் ஈடுபடக்கூடிய அமைப்பும், மற்றவர்களை வழிநடத்தக்கூடிய வலிமை ஏற்படும். 10ம் இடத்தில் சனி இருந்தால் அவருக்கு திடீர் பணி, வேலை இழப்பு ஏற்படும். அதே போல கோட்சாரத்தில் 10ல் சனி இருந்தால் அவருக்கு ஜீவனத்தில் பிரச்னை உண்டாகும்.

ராசிக்கு 11ம் இடத்தில் சனி இருப்பின் அந்த ஜாதகருக்கு வாழ்வில் எதிர்பாராத, திடீர் லாபங்கள் உண்டாகும். அசையா சொத்துக்கள் வாங்குதல், பொருளாதார ரீதியாக முன்னேற்றமான நிலை உண்டாகும். மூத்த சகோதரர் தோஷம் உண்டு.

ராசிக்கு 12ல் சனி அமைந்திருந்தால் அவரின் கண்களில் பாதிப்பு ஏற்படும். எதிரிகளால் தொல்லையும், தேவையற்ற வீண் விரயம், கட்டில் சுக பாதிப்பு ஏற்படும்.சிலருக்கு சனி பலமிழந்து இருந்தால் கெடு பலனைக் கொடுத்தாலும் அவருக்கு சிறப்பான மற்றும் ஏற்றம் தரக்கூடிய வாழ்க்கையையே வாழ்வார்கள் என்பது ஜோதிட விதி.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்