ஓடும் ரயில் ஏற்கனவே திருமணமான பெண்ணை திருமணம் செய்து கொண்ட வாலிபர்…

Date:

பீகார் மாநிலம் சுல்தான்கன்ஜை அடுத்த குர்த் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அனுக்குமாரி, இவர் அதே பகுதியைச் சேர்ந்த அஷூகுமார் என்பவர் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் அனுகுமாரியின் வீட்டிற்கு தெரியவர அவர்கள் அனுகுமாரியை வீட்டிலேயே அடைத்து வைத்தனர். அதன் பின் அவசர அவசரமாக மாப்பிள்ளையை தேடி கடந்த ஏப்ரல் மாதம் கிரண்பூர் என்ற கிரமத்தை சேர்ந்த ஒருவருக்கு
திருமணம் செய்துகொடுத்துள்ளர். ஆனால் இந்த திருமணத்தில் அனுகுமாரிக்கு விருப்பமில்லை.

இதையடுத்து இவர்களது திருமணத்திற்கு பிறகு அனுகுமாரி தன் கணவனிடம் தான் அஷூகுமாரை விருப்புவதாகவும் அவருடன் வாழ விருப்புவதாகவும், தன் கணவருடன் வாழ விருப்பவில்லை எனவும் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அவர் கணவர் அவரை வீட்டை விட்டு செல்ல தடை செய்யவில்லை எனவும் தெரிகிறது.

இது தான் சமயம் என கருதிய அனுகுமாரி தன் காதலன் அஷூகுமாருக்கு போன் செய்து நிலைமையை சொல்லி தன்னை சுல்தான்கன்ஜ் ரயில் நிலையத்திற்கு வந்து சந்திப்பதாக சொல்லியிருக்கிறார். அதன் படி இருவரும் சுல்தான்கன்ஜ் ரயில் நிலையத்தில் சந்தித்தனர். அப்பொழுது அங்கு வந்த பெங்களூரு செல்லும் ரயிலில் இருவரும் ஏறினர். ஓடும் ரயிலேயே அஷூகுமார், அனுக்குமாரியை திருமணம் செய்தார். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

இந்த திருமணம் சட்டப்படி செல்லுபடியாகுமா என்பது தெரியவில்லை முதல் கணவரை முறையாக விவாகரத்து செய்யாமல் வேறு ஒரு நபரை திருமணம் செய்தால் அந்த திருமணம் இந்திய திருமணசட்டப்படி செல்லாவது. இருந்தாலும் முதல் கணவர் தன் மனைவியுடன் வாழ விருப்பவில்லை என்றால் இவர்கள் இணைந்து வாழ்வதில் சட்டம் தந்த தடையும் விதிக்காது.

தற்போது ஓடும் ரயிலில் திருமணம் செய்த இந்த ஜோடிக்கு பல்வேறு இடங்களிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்