வவுனியா ஓமந்தை பனிக்கன் நீராவிப் பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு ஆட்களை ஏற்றிச் சென்று பேருந்து ஒன்று இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகியது.
குறித்த பேருந்து வெளிநாடுகளில் இருந்து நாடு தி்ரும்பிய பயணிகளை அழைத்துக் கொண்டு கிளிநொச்சி பூநநகரி தனிமைப்படுத்தல் நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.
இதன்போது ஓமந்தை பனிக்கன் நீராவிப் பகுதியில் வீதிக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் மோதியதில் விபத்திற்குள்ளாகியது.
பேருந்தில் 7 பேர் பயணம் செய்த நிலையில் எவருக்கும் காயங்கள் ஏற்பபடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




