மட்டக்களப்பில் நாளை (8) தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் அதிக அபாய நிலையிலுள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 25,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின மக்கள் தொகை 6 இலட்சமாக காணப்படும் நிலையில், 30 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 311,000 ஆகும்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் சினோஃபார்ம் தடுப்பூசியே ஒதுக்கப்பட்டுள்ளது.




