பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா ரேஷ்மா?

Date:

நடிகை ரேஷ்மா முரளிதரன் பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து விலக போகிறார் என பரவிய செய்தி உண்மை இல்லை என அவரே விளக்கம் கொடுத்து உள்ளார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘பூவே பூச்சூடவா’. 2018ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த தொடரில் சக்தி என்ற ரோலில் நடித்து வருகிறார் ரேஷ்மா முரளிதரன்.

இதில் அழகிய நடிப்பை வெளிப்படுத்தி வரும் ரேஷ்மாவுக்கு அதிகம் அளவு ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ரேஷ்மா பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து விலக போகிறார் என தகவல் பரவியது.

ஆனால் அது உண்மையில்லை முற்றிலும் வதந்தி தான் என இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்து இருக்கிறார் நடிகை ரேஷ்மா முரளிதரன்.

“ஒரு வதந்தி பரவி கொண்டு இருக்கிறது. எனக்கு பதிலாக சக்தியாக வேறொரு நடிகை நடிக்க போகிறார் என பரவி வரும் செய்தி முற்றிலும் பொய் செய்தி. வருத்தப்படாதீர்கள். நான் திரும்ப வருவேன். Pls dont spread rumours” என ரேஷ்மா தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்