முல்லைத்தீவில் கொரோனா பரவலிற்கு காரணமான புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையை திறக்க விடாமல் தடுக்க முயன்ற குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக சென்று, பணியாளர்களை தடுக்க முயன்ற குற்றச்சாட்டில் உபதவிசாளர ஜனமேஜெயந்த் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
அந்த பகுதியில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை தேடும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையை மீள திறப்பதற்கு கடுமையான எதிர்ப்பு சமூகத்தில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



