உலகிலேயே அதிக விலைக்கு விலை போன கார் பார்க்கிங்!

Date:

ஹாங்காங்கில் உள்ள ஒரு அப்பார்மெண்டின் கார் பார்க் செய்யும் பகுதி ரூ9.5 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. உலகிலேயே காஸ்ட்லியான கார் நிறுத்தும் இடம் இது தான் என தெரியவந்துள்ளது.

நீங்கள் உங்கள் வாழ்வில் எதற்கெல்லாம் அதிகமாக பணம் செலவிடுவீர்கள்? வீடு வாங்க? கார் வாங்க? நகைககள் வாங்க? இப்படி உங்கள் வாழ்நாள் கனவுகளை பெற நீங்கள் அதிகம் செலவிடுவீர்கள். இதுதான் உலக மக்களின் வழக்கமும். ஆனால் தேவையில்லாத அல்லது அவ்வளவு முக்கியமில்லாத விஷயங்களகாக ஒருவர் கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. அது பற்றி முழுமையாக காணலாம் வாருங்கள்.

ஹாங்காங் நாட்டின் மேற்கு பகுதியில் தீ பீக் என் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள பகுதியில் மவுண்ட் நிக்கல்சன் டெவலப்மெண்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இந்த குடியிருப்பு தான் உலகின் அதிக மதிப்பு கொண்ட அட்ரஸாக பார்க்கப்படுகிறது. இந்த அந்த நகரின் மிகப்பெரிய சொகுசு அப்பார்ட்மெண்ட்டாக உள்ளது.

இந்த அப்பார்மெண்ட்டின் பார்க்கிங் லாட் ஒன்று 10 மில்லியன் ஹாங்காங் டாலருக்கு விற்பனையாகியுள்ளது. அதன் இந்திய மதிப்பு சுமார் ரூ9.5 கோடியாகும். ஆம் வெறும்
கார் பார்க்கிங் செய்யும் இடத்தை ஒருவர் ரூ.9.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்.

இது குறித்து அந்த அப்பார்மெண்டின் விற்பனை அதிகாரி கூறும் போது : “பார்ங்கிங்கிற்காக அவர் கட்டிய பணம், அவர் அந்த அப்பார்மெண்ட்டை வாங்கிய பணத்துடன் ஒப்பிடும் போது ஒன்றுமேயில்லை. அதை வாங்கியவர் தன் காரை நிறுத்துவதற்காக தான் வாங்கியுள்ளார். அந்த இடத்தின் மூலம் அவருக்கு எந்த விதமான லாபமும் கிடைக்கப்போவதில்லை. இந்த இடம் 134 சதுரடி அளவு கொண்டது. ” என தெரிவித்துள்ளார்.

இந்த கார் பார்க்கிங் தான் தற்போது உலகிலேயே விலை உயர்ந்த கார் பார்க்கிங் என தெரியவந்துள்ளது.

இந்த அப்பார்ட்மெண்டை உருவாக்கிய நிறுவனத்திற்கு மொத்தம் 10 பேர் முதலீட்டாளர்களாக இருக்கின்றனர் அதில் ஒருவர் பிரபலமான ஹாலிவுட்படமான தி டார்க் நைட் படத்தில் நடித்த Johnny Cheung Shun.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...

யாழ் கோயில் திருவிழாவில் அதிசக்தி மின்விளக்குகள்: கண் பாதிப்பால் 25 பேர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்