நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் கொழும்பு மாவட்டத்திலிருந்தே, அதிகளவானவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று நாட்டில் 3,103 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர், நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 202,357 ஆக அதிகரித்துள்ளது.
கோழும்பில் 828 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
கம்பஹா மாவட்டத்தில் இருந்து 544 பேர்,குருநாகல் மாவட்டத்தில் இருந்து 255 பேர், மாத்தறை மாவட்டத்தில் இருந்து 224 பேர், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 140 பேர், கண்டி மாவட்டத்தில் இருந்து 124 பேர், காலி மாவட்டத்தில் இருந்து 117 பேர், அம்பாறை மாவட்டத்தில் இருந்து 114 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 110 பேர், கேகாலை மாவட்டத்தில் இருந்து 109 பேர், மாத்தளை மாவட்டத்தில் இருந்து 96 பேர், இரத்னபுரி மாவட்டத்தில் இருந்து 86 பேர், நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 69 பேர், பதுளை மாவட்டத்தில் இருந்து 64 பேர், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து 51 பேர், யாழ் மாவட்டத்தில் இருந்து 39 பேர், மொனாரகலை மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தலா 26 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 18 பேர், புத்தளம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 17 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 9 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து 6 பேர், வவுனியா, மன்னார் மாவட்டத்தில் இருந்து தலா 2 பேர், வெளிநாட்டிலிருந்து வந்த 9 பேர் தொற்றிற்குள்ளாகினர்.




