அரியாலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவற்கு இராணுவ காவலரண் அமைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அரியாலையின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று(06) சென்ற கடற்றொழில் அமைச்சர், சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள், பொலிஸார், படைத் தரப்பினர் மற்றும் பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.
சட்டவிரோத மண் அகழ்வு குறித்து பொதுமக்கள் முறைப்பாடு வைத்ததாகவும், பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடிய பின்னர், பாதுகாப்பு தரப்பின் காவலரண் அமைப்பது உள்ளிட்ட பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்து, மணல் அகழ்வை கட்டுப்படுத்த உத்தரவிட்டதாக ஈ.பி.டி.பி ஊடப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.




