கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட அக்கராயன்குளம் மத்தியில் மாட்டினை விலைக்கு வாங்கி சட்டவிரோதமாக அதனை வெட்டி இறைச்சியாக்கி விற்பனை செய்ய முற்பட்ட இருவரை அக்கராயன்குளம் பொலீஸார்
கைது செய்துள்ளனர்.
தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை பயன்படுத்தி வீட்டின் பின்புறமாக உள்ள காட்டுப் பகுதியில் மாட்டினை வெட்டி அதனை இறைச்சியாக்கி விற்பனை செய்யவுள்ளதான தகவல் பொலீஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்தமையினை தொடர்ந்து பொலீஸாரால் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்யதுள்ளதோடு, 70 கிலோ இறைசியும் கைப்பற்றியுள்ளனர். விசாரணைகளின் பின் குறித்த சந்தேக
நபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.




