கடலுக்கடியில் சைக்கிள் பயணம்; மூச்சை அடக்கி ஓட்டி ‘சாதனை’!

Date:

புதுச்சேரி மற்றும் சென்னை பகுதிகளில் டெம்பிள் அட்வென்சர் என்ற பெயரில் ஆழ்கடல் பயிற்சி வழங்கி வருகிறார் அரவிந்த். ஆழ்கடல் பயிற்சியாளர் என்பதால் கடலுக்குள் உள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக்குகளை அகற்றி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த அவர், மேலும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கடலுக்கு அடியில் செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் உலக சைக்கிள் தினம் என்பதால் பொதுமக்கள் அனைவரும் சைக்கிளை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கடலுக்கு அடியில் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கடலுக்கு அடியில் சைக்கிள் ஓட்டும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து அரவிந்த் கூறியதாவது:

சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் பயன்கள் குறித்தும் சைக்கிள் பயிற்சியின் பலன்கள் குறித்தும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே கடலுக்கடியில் சைக்கிள் ஓட்டினேன்.

ஏற்கனவே ஆக்சிசன் பயன்படுத்தி சைக்கிள் ஒட்டப்பட்டது. ஆனால் மூச்சை அடக்கி சைக்கிள் ஓட்டுவது இதுவே முதல் முறை. இவ்வாறு அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

“எம்.எஸ்.வி முதல் அனிருத் வரை பாடிய கானகோகிலம்” – எஸ்.ஜானகி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பாடகரான எஸ்.ஜானகி மறைவுக்கு முன்னாள் முதல்வரும் திமுக...

திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி மறைவு

இந்திய திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி காலமானார். அவருக்கு வயது 88....

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்