நேற்று 3,103 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 202,357 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம காணப்பட்டவர்களில் 3,094 பேர் புத்தாண்டு COVID-19 கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 9 நபர்களும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
34,529 பேர் தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று, COVID-19 இலிருந்து மீண்ட 1,851 நபர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 166,132 ஆக உயர்்தது.
தொற்று சந்தேகத்தில் 1,377 பேர் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1