கொரோனா வார்டில் ஜன்னல் வழியே தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் : காப்பாற்றிய பணியாளர்கள்!

Date:

விசாகப்பட்டினம் கொரோனா வைரஸ் தொற்று மருத்துவமனையில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை தக்க சமயத்தில் ஓடி வந்து மருத்துவமனை ஊழியர்கள் காப்பாற்றினர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் திடீரென எழுந்து சென்று அருகில் உள்ள ஜன்னலுக்கு பக்கத்திற்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றார்.

இதனை கவனித்த அங்கு பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் ஓடி வந்து அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர். தொடர்ந்து பெண்ணிற்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பொதுமக்களை காக்க தங்களது உயிரை பணயம் வைத்து இரவு பகலாக உழைத்து வரும் நிலையில் இளம்பெண்ணை சக பணியாளர்கள் காப்பாற்றிய சம்பவம் பாராட்டுக்களை பெற்றுவருகிறது.

spot_imgspot_img

More like this
Related

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...

தன்னைத்தானே சுட்டு உயிர்மாய்த்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன்...

13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்