“டைட்” பேண்ட் போட்டு வந்ததால் பெண் எம்.பி.க்கு ஏற்பட்ட அவமானம்!

Date:

தன்சானியா நாட்டில் உள்ள பாராளுமன்ற பெண் உறுப்பினர் “டைட்”டாக பேண்ட் அணிந்து வந்ததால் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இது பெண்ணியவாதிகளிலேயே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

இந்த நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அவர்கள் என்ன உடை அணிய வேண்டும்? எப்படி நடந்த கொள்ள வேண்டும் என ஆண்கள் பெண்களுக்கு பாடம் எடுக்கும் கலாச்சாரம் உலகம் முழுவதும் உள்ளது அப்படியான ஒரு சம்பவம் தான் சமீபத்தில் நடந்துள்ளது.

தான்சானியா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் Condester Michael Sichlwe, இவர் நாட்டின் ஆட்சியில் இருக்கும் சிசிஎம் என்ற கட்சியை சேர்ந்தவர் அந்நாட்டின் அமைச்சராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தான்சானியாவில் நடந்த பாராளுமன்ற கூட்டத்திற்கு Condester Michael Sichlwe ஒரு மார்டன் உடையில் சென்றுள்ளார். அப்பொழுது கூட்டத்தின் போது மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரான ஹூசைன் அமர் என்பவர் எழுந்து “மாண்புமிகு பேரவை தலைவரே, இதோ என் அருகில் அமர்ந்திருக்கும் சகோதரி மஞ்சள் நிற ஆடையில் வந்துள்ளார். அவரது பேண்ட்டை பார்த்தால் மிகவும் டைட்டாக இருக்கிறது.

இந்தபாராளுமன்றம் சமுதாயத்தின் கண்ணாடியாக திகழ வேண்டும். இங்கு இவ்வாறான ஆடைகள் அணிந்து வருவதை ஏற்க முடியாது” என கூறினார். இதற்கு பேரவை தலைவர் Condester Michael Sichlweவிடம் தற்காலிகமாக பாராளுமன்ற கூட்டத்திலிருந்து வெளியேறும் படியும் வேறு உடை மாற்றிவிட்டு வரும்படியும் அறிவுறுத்திஅவரை வெளியே செல்லும் படி கேட்டுக்கொண்டார்.

இது அந்நாட்டில் பெரும் விவாத பொருளாக மாறிவிட்டது. பெண் அணிந்த உடைக்காக அவரை வெளியே அனுப்பியது தவறு என பலர் குரல் கொடுத்தனர். ஆனால் பேரவை தலைவர் தரப்பிலிருந்து முறையாக ஆடை அணியாதவர்களை பேரவைக்குள் அனுமதிக்காமல் இருக்க பேரவை தலைவருக்கு அதிகாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இருந்தாலும் ஆடை விவகாரத்தில் அந்த பெண் அவருக்கு விருப்பமான ஆடையையே அணிந்திருக்கிறார். அதற்காக அவரை வெளியே அனுப்பியது தவறு என்றும் பேரவை தலைவர் செய்த காரியத்திற்காக Condester Michael Sichlweவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்நாட்டு பெண்கள் அமைப்பு தற்போது பேராாட்டத்தை கையில் எடுத்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கலவரத்தில் காயமடைந்த மேலும் 2 சிறை உத்தியோகத்தர்கள் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை...

பெற்றோரை அடித்துக்கொன்ற மகன்

எம்பிலிப்பிட்டிய பகுதியில் போதைக்கு அடிமையான மகன், நேற்று முன்தினம் (13) இரவு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியின் வாக்குமூலம் பதிவு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ஷங்ரி-லா ஹோட்டல் குண்டுதாரியான முகமது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்