மாவனெல்லை, தெவனகல மலை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 4 பேர் காணாமல் போயுள்ளனர்.
வீடு ஒன்று மண்ணில் புதையுண்டுள்ளதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டது.
தாய், தந்தை, மகன், மற்றொரு நபர் காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை, கேகாலை அல்கம பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ். விஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அனர்த்தம் குறித்து குறித்த நபருக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டு அவரை வீட்டில் இருந்து வெளியேற கூறியிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.




