நாட்டில் நேற்று 3,410 புதிய COVID-19 தொற்றாளர்கள் பதிவாகினர். இதன்மூலம், நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 199,254 ஆக உயர்ந்தது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 3,398 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து வந்த 12 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று, தொற்றிலிருந்து குணமடைந்த1,884 பேர், சிகிச்சை மையங்களிலிருந்து வெளியேறினர்.குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 164,281 ஆக உயர்ந்தது.
தற்போது 33,365 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.




