தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு இலவச பீர்; அமெரிக்க அதிபர் அறிவிப்பு!

Date:

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு இலவச பீர் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிக அவசியமாக இருக்கிறது. எனவே, பொதுமக்கள் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென அரசுகள் வலியுறுத்துகின்றன.

பொதுமக்களில் ஒரு சாரார் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். எனினும், சிலர் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். எனவே, மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிப்பதற்காக சில நாடுகளில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த வரிசையில், அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு இலவசமாக பீர் வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜூலை 4ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் 18 வயதுக்கு மேலானோரில் 70 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போட ஜோ பைடன் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

இதுவரை 63 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்வோரை ஊக்குவிப்பதற்காக, தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களுக்கு இலவசமாக பீர், இலவசமாக ஹேர் கட் சேவை வழங்கப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் திரொட்ஸ்கி, சட்டவிரோதமாக இடையூறு செய்தல்,...

மண்டைதீவு படுகொலை வழக்கு மீண்டும் செப்டம்பர் 22 வரை ஒத்திவைப்பு

மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்