வீட்டில் தனியாக இருந்த பெண் மீது ஆசிட் வீச்சு : 80% காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை!

Date:

உத்தரபிரேசத்தில் வீட்டில் தனிமையில் இருந்த பெண் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரயாகராஜ் மாவட்டத்தில் லோஹ்ரா மஸ்ராவைச் சேர்ந்த சங்கர்லாலின் மனைவி மால்டி தேவி. இவர்களின் மகன்கள் சஞ்சய் மற்றும் அஜய் ஆகியோர் மும்பையில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மால்டிதேவி (46) தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில், வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், மால்டி தேவி மீது ஆசிட்டை வீசி விட்டு, அங்கிருந்து தப்பியோடினர்.

ஆசிட் பட்டதால் வலி தாங்க முடியாமல் மால்டி தேவி அலறியுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு அவரது வீட்டு முன்பு கிராம மக்கள் ஒன்று திரண்டனர். பிறகு, போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டு, மால்டி தேவியை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையெ, வீட்டில் தனியாக இருந்த மால்டி தேவி மீது ஆசிட் ஊற்றியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

spot_imgspot_img

More like this
Related

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...

மாணவர்களை டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாக்க, சீருடை விதிகளைத் தளர்த்த பாடசாலைகளுக்கு அனுமதி

டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை...

சம்பந்தனுக்கு பொது இடத்தில் நினைவுத்தூபி அமைக்கக்கூடாது

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்