யாழில் மேலும் ஒரு கிராம அலுவலர் பிரிவினை தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவு சிபார்சு செய்துள்ளது.
உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இணுவில் கிராமத்தில் இனுவில் ஜே /190 கலாஜோதி கிராம சேவகர் பிரிவில் அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுதன்
காரணமாக இணுவில் கிராமத்தின் ஒரு பகுதியினை தனிமைப் படுத்துமாறு சுகாதாரப் பிரிவினரால் சிபார்சு செய்யப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணியின் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது .
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் தற்போது 3 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




