29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

யாழில் 12,000 குடும்பங்களிற்கு இன்று 5,000 ரூபா கொடுப்பனவு!

யாழ் மாவட்டத்தில் இன்று 12 ஆயிரம் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுளளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் அரசினால் நிதி கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில் யாழ் மாவட்டத்தில் 15 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 12,000 குடும்பங்களுக்கு இன்று காலையில் இருந்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த க.மகேசன், தொடர்ச்சியாக ஏனைய குடும்பங்களுக்கும் குறித்த நிதி வழங்கி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் சமுர்த்திபெறும் சுமார் 75,000 குடும்பங்களுக்கும் அத்தோடு வருமானம் குறைந்த 38,000 குடும்பங்கள் உட்பட மொத்தமாக 152,000 குடும்பங்களுக்கு குறித்த 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக க.மகேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment