கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட குமாரசாமிபுரம் கிராமத்தில் இன்று வீட்டு கிணற்றிலிருந்து வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடுப்பகுதியில் கண்டாவளைப் பகுதியில் இடம்பெற்ற வீதிவிபத்தில் படுகாயமடைந்த நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்த குறித்த பெண் தனிமையில் வசித்துவந்த நிலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
வேலாயுதம் பரமேஸ்வரி (74) என்பவரே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் தவறிவீழ்ந்தாரா? அல்லது தற்கொலையா? கொலையா? என
தர்மபுரம் பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




