29.2 C
Jaffna
April 11, 2025
Pagetamil
இந்தியா உலகம்

இந்தியாவிலிருந்து துபாய்க்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு தொடர்ந்து தடை: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவிப்பு!

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து துபாய்க்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு ஜூன் 30ம் திகதி வரை தடை நீட்டித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கோவிட் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக, ஏப்ரல் 24ம் தேதி முதல் பயணிகள் விமானங்களை அமீரகம் நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த 14 நாட்களாக இந்தியா வழியாக பயணம் செய்த பயணிகள் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வர தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவிலிருந்து துபாய்க்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு ஜூன் 30ம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட் கோல்டன் விசாக்கள் வைத்திருப்பவர்கள், தூதரக பணி உறுப்பினர்கள் கோவிட் நெறிமுறைகளுக்கு இணங்க பயணிக்கலாம். அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தேர்தல் நடைமுறை அறிவிப்பு: அண்ணாமலை, நயினாருக்கு சிக்கல்?

Pagetamil

‘பாமகவுக்கு இனி நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவர்’ – ராமதாஸ் அறிவிப்பு

Pagetamil

மும்பை தாக்குதல் தீவிரவாதி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா: சிறப்பு விமானத்தில் இன்று அழைத்து வரப்படுகிறார்

Pagetamil

சீனப் பொருட்கள் மீது 125% வரி விதித்த ட்ரம்ப்!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!