வடக்கில் இன்று 135 பேருக்கு தொற்று: யாழில் மட்டும் 96 பேர்!

Date:

வடமாகாணத்தில் இன்று 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம், பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 951பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில்,

கிளிநொச்சி மாவட்டத்தில், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர், கிளிநொச்சி தொற்று நோயியல் வைத்தியசாலையில் ஒருவர் என 8 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், மல்லாவி சுகாதார சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர் என 6 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

மன்னார் மாவட்டத்தல், மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேர், மன்னார் பொது வைத்தியசாலையில் ஒருவர், நௌவி தனிமைப்படுத்தல் முகாமில் ஒருவர் என 15 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாவட்டத்தில், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஒருவர், யாழ் போதனா வைத்தியசாலை ஒருவர்,  யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 45 பேர், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் என 96 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா மாவட்டத்தில், பூவரசங்குளம் வைத்தியசாலையில் 4 பேர், வவுனியா பொது வைத்தியசாலையில் 2 பேர், செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலை 4 பேர் என 10 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மஹிந்தவிற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடமிருந்து அழைப்பாணை கிடைக்கவில்லையாம்

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

ஈரான் தவறாக நடந்தால் மீண்டும் தாக்குவோம்: ட்ரம்ப்

ஈரானுடனான ஒரு ஒப்பந்தத்தின் கருத்தாக்கம் குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அதன்...

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்